மழை நீரும் கதை கேட்கும்(குறுங் கவிதைகள் )
காவிரியும் கொள்ளிடமும்
வாழ்ந்த கதை
நமக்குத் தெரியாது !
பாலாரும் தாமிரபரணியும்
வந்தது போனது
சுவடு தெரியாது !
முல்லை பெரியாரும்
சிருவாணியும் வந்த கதை
புரியாது!
குளத்தின்வேதனை
ஆறுகள்
அறியாது.
ஏரியில் உள்ள நத்தைகளை
கிணற்றுத் தவளைகள்
அறியாது.!
படகுக்கு
ஏரியின் கதை
தெரியாது!
கிணற்றின் வித்தை
கடல்
அறியாது.!
கடல் மீனின் திறம்
கிணற்று மீனுக்குத்
தெரியாது!
இவை எல்லாம் ஒன்றானால்
மழை நீரும் கதை கேட்கும்
நாள் எப்போது ?!!