நினைவுகள்
அந்தி மாலையில்
அழகிய வேளையில்
கடற்கறையோர மணலில்
கால்தடம் பதிய
கண்மூடி நின்றிருந்தேன் .
தென்றல் இதமாய் வருட
சாரல் மெதுவாய் தழுவ
நினைவுகள் மின்னல் ஒளியாய்
சிந்தைக்குள் நுழைந்தது .
சின்னத் தாரகையின்
மெல்லிய பாதங்கள்
மண்ணில் புதைய,
செல்லத் தம்பியின்
மழலைச் சொல்
காதில் இனிக்க,
ஓடி விளையாடிக்கொண்டிருந்த
வேளையில் கைத்தொலைபேசி
அழைத்தது.
தாய் தந்தையிடம் விடைபெற்று
தங்கத் தோழியை அழைப்பதற்கு
இரயில்நிலையம் சென்றிருந்தேன் ,
அப்போதுதான் அந்த அவலம் நிகழ்ந்தது!!
கண்கள் செருகின
நெஞ்சம் கலங்கின
கால்கள் திசைநோக்கி ஓடின
காவலாளிகளின் சுவர் தடுத்தது .
வரிசையாக மனிதஉடல்
உயிரின்றி அடுக்கப்பட்டது .
மனம் கனக்க
கண்களில் நீர்பெருக
கடற்தாயைப் பார்த்து
அன்பான குடும்பங்கள்
அளவில்லா பசியால்
அறிவிழந்து ஆழ்கடலில்
அனைத்துக் கொண்டாயோ ?
கபடமற்று கடல்அலைகள்
கால்மீது தழுவ
கண்களில் கண்ணீருடன்
ஆறாம் ஆண்டு
அஞ்சலி செலுத்தினேன் .