என் தங்கைக்கு திருமணம் ....

" என்னுடன் பிறந்த என் உடன் பிறப்பே
மணமகள் கோலத்தில்
நீ இருக்க , யாதென நான் தரட்டும்
சீர்வரிசையாய் !.. அதோ
ஒற்றையில் மோக நிலா மேக வீதியில்
உலா .. கடத்தி தரவா ??
ஏன் இந்த வினா, தினந்தினம் அன்பான
உன் பூமுகம் பார்க்கவே
தனியே தவமிருக்கும் நிலா !.. உன் புகுந்த
வீட்டின் கண்ணாடியை
அகற்றிவிடு, என்ன புரியவில்லையா ?..
நான் கடத்தி தந்த ஆகாய
நிலவை சுவற்றில் ஆணியடித்து அழகாய்
மாட்டிவிடு !.. தங்கையே
என்றும் உன் இல்லறம் செழிக்க இந்த
அண்ணனின் வாழ்த்துக்கள் !..

-------------வாழ்க வளமுடன்-------------

எழுதியவர் : dhamu (7-Jun-12, 1:18 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 350

மேலே