என் பெயர்..........
என்னைப் போல் ஒருவன்
மௌனத்தை மாலையாக்கி ......
தன்
உடலை சிலையாக்கி
மனித முகம் சீண்டா
மகானாய்
சாலை ஓரம் அன்று
நின்றது ஒரு கழுதை மட்டுமே .......
திடீர் சத்தத்தில்
திரும்பி பார்த்தேன்
தூக்கி எறிந்த குப்பைக்குள்
பாக்கி இருந்த சோறு
எனை பார்க்க
மறுத்த இறைவன்
ஆக்கி தந்தது போல்- எண்ணி
உண்டேன் ...........அழைத்தான்
ஒருவன் பைத்தியம் வா .......என்று !!!!!!!!!!
கசக்கி போட்ட
பேப்பர்குள் கவிதை இருந்ததை -போல
எனக்கும் பேர் வந்த நாளோ .......! என்று
எண்ணி ஓடுகிறேன் ............
கடை தெருக்குள்ள !!!!!!
யாரென தெரியாமல் யாரையும் தெரியாமல் வாழும் மனித மகான்....................பிறப்பு: பெயர்: ஊர் : ..........