!!!====(((ஏழை என்று சிரிப்பது???)))====!!!

அட்ச ரேகைகளும்
தீர்க்க ரேகைகளும்
கைரேகைகாரர்களால்
நாளுக்கு நாள்
காணாமல் போய்கொண்டு இருக்கிறது...

உதவும் கரங்களும்
உயர்ந்த மனங்களும்
கோவிலைத்தேடி வருவார்களென்று
கோவில்வாயிலுக்கு பிச்சைகாரகூட்டம்
குடிபெயர்ந்துவிட்டது...

பத்துகாசு கையிலில்லை
பழையகஞ்சி கூழில்லை
பசிக்கு பதில் சொல்லமுடியாத அவலம்
கடவுளிடம் கையேந்தி
கிடக்கிறது மனிதம்...

பல பூஜைகளும் புனஷ்காரங்களும்
யாகங்களும் செய்தோம்
எலிக்கும் பூனைக்கும் திருமணம்
செய்துவைத்து பார்த்தோம் - இங்கே
வறுமையும் தீரவில்லை வயிறும் நிறையவில்லை...

முற்றும் துறந்தவந்தான்
முற்காலத்தில் முனிவன் - இன்று
கலவியளிலும் களவுகளிலும்
கருப்புபண குவியல்களிலும்
சல்லாபித்துகொண்டிருப்பவனே முனிவன்...

உண்டியலில் பணம் போட்டோம்
வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டோம்
இறைவனுக்கும் இரக்கமில்லை
கட்சிகாரனையும் காணவில்லை - இனி
யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை...

ஐந்துவேளை தொழுபவனின் ஆயுதமும்
காலைமாலை ஜெபிப்பவனின் மதமாற்றமும்
கோவில்களில் பூஜிப்பவனின் பித்தலாட்டமும்
மனிதநேயத்திற்கு தினம் தினம்
விஷபரிச்சை வைத்துகொண்டு இருக்கிறது...

ஜெபித்தளிலும் சபித்தளிலும்
மந்திரம் ஒதுதளிலும்
ஜாதகம் பார்த்தலிலும்
மனிதம் மாறுபட்ட முகத்தை காட்டி
மனிதனை பார்த்து சிரிக்கிறது...

ஏழையின் சிரிப்பினிலே
இறைவனை காணலாம் என்றாகள்
ஏழை என்று சிரிப்பது...?
இறைவனை என்று காண்பது...???

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (17-Jul-12, 4:36 pm)
பார்வை : 675

மேலே