வாக்குமூலம்

எனக்கான உன் தருணங்கள்....

காற்றுக்குக் கூட இடம் தராமல்
நீ இறுக்கி அணைக்கும் விநாடிகள்...

"மாலை சந்திப்போம்" என்று
பேசும் உன் காலை நேரக் கண்களின்
மெல்லிய சோகம்....

உதடுகள் காதுமடல் உரச
ரகசியமாய்
நீ சொல்லும் ஐ லவ் யு க்"கள்.."

எனக்காகவே நீ படிக்கும்
தபூ ஷங்கர் புத்தகங்கள்....

ஒவ்வொரு இரவிலும்
நீ வைக்கும்
செல்லப்பெயர்கள்....

மின் அரட்டைகளின்
Status Messageஇல்
எனக்காக நீ வைக்கும்
நீ வைக்கும் காதல் வரிகள்....

தினமும் மாலையில்
முதன் முதல் சந்திப்பது போல்
என்னைப் பருகும்
உன் கண்களின் பார்வை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி நான் சுமாராக எழுதுவதையும்
படித்து சுவையோடு நீ சொல்லும் பாராட்டுக்கள்...
.
முடிவில்லாமல் நீள்கிறது
எனக்கான உன் தருணங்கள்....

எழுதியவர் : (28-Feb-10, 8:33 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1789

மேலே