இழப்பு

எழுந்தாலும் மறைந்தாலும் சிவந்து மலரும்
வான்முகடைக் காண முடிய‌வில்லை
விரல்கள் தலைகோத மடியில் தலை சாய்த்து
அன்னையின் அன்பில் துயில்கொள்ளவில்லை
பொழுது விடிந்ததென்று அறிவிக்கும் சேவலின்
குரல்கேட்டு கண் விழிகக்வில்லை
சுவையும் அலவும் குறைந்தாலும் நிறைந்தாலும்
குடும்பத்துடன் கூடி உணவருந்தவில்லை
வேம்பு மலரின் வாசனை திருடிவரும்
தென்றலின் குலிரணைப்பில் கண்ணுறங்கவில்லை
வயல்வெலியில் ஓடி ஆற்றங்கரையில் கூடி
கவிதைகள் பாடி காதலிக்கவில்லை
பணத்தின் வாசனையில் உயர் நாகரீக மோகத்தில்
இத்துனை இழப்புகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை

எழுதியவர் : சேகர் (5-Aug-12, 11:02 pm)
சேர்த்தது : இராஜசேகர்
பார்வை : 181

மேலே