இலைகள்.

* ஓற்றைக்கையுடன்
ஒட்டிக்கொண்டு
தொங்கிக்கொண்டிருக்கும்
கிளைகளின்
பச்சைக்
கைக்குழந்தைகள்.
* உதிர்ந்துவிட்டு
மண்ணில்
புதைந்துவிட்டு
உரமாய்
உருவெடுக்கும்
உழவர்களின்
நண்பர்கள்.
* பச்சைக்கொடிக்கு
பதிலாய்
தன்னையே
அசைத்து
காற்றை
வரவேற்கும்
ஊதியம்
எதிர்பார்க்காத
ஊழியர்கள்.