நாம்

கூண்டு கிளியாக நாம் இருந்தோம்,
ஆங்கிலேயர்கள் என்ற வேட கூட்டத்தால்,,
எதிர்காலம் அறியாமல் நாம் இருந்தோம்,,,
தினம் பலர் மாண்டனர் வெள்ளையர் வெறியாட்டத்தால்,,,
அகிம்சை வழியில் போராடிட நாம் நினைத்தோம்,,,,
அநாகரிக முறையில் அடித்து விரட்டினர்,,
பின் கடல் அலைகளாக பொங்கியெழுந்து,,,,
தடைகளை தகர்க்கும் சுனாமியானார்கள்,,,
அமைதியை மட்டுமே விரும்பும் நம் இந்தியர்கள்,,,,,
ஆயுதம் ஏந்தவும் தெரியும் என்று புரியவைத்தார்கள்,,,,
சூரிய வெளிச்சம் என்ற சுதந்திரம் கிடைத்திட,,
பனிமூட்டமாக இருந்த வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டனர்,,,,,,
நியாயம் என்ற சொல் நிலைத்திட,,,
ஜனநாயகம் என்ற ஆட்சி அமைந்தது