எழுத்தறிவித்த இறைவனை!

தானியங்கள்தான் மனிதனின்
உயிர்த்துடிப்பு!
உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும்
தானியங்கள்தான் தன்னியக்க
ஊட்டச்சத்து!
ஆம்! ...... தமிழில் உயிரெழுத்து 'அ'
குழந்தையின் கைபிடித்து
முதலில் எழுதுவதும்
தானியத்தின் பரப்புகளில்!
வெற்றித் திருநாளாம் விஜயதசமி
வாழ்த்துவோம் வாரீர்
எழுத்தறிவித்த இறைவனை!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம். (17-Oct-10, 8:53 am)
பார்வை : 408

மேலே