எங்கே எனது தீபாவளி ?!

பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில்
பெரியவர்கள் குழந்தைகளாகவும்
குழந்தைகள் தேவதைகளாகவும்
பரபரப்பாய் பவனித்திரிந்த - அந்த
பொன்னந்தி மாலையில்
அந்த ஏ.டி.எம்-ற்கு தன்
மகனோடு வந்த ஒரு தந்தை
எனது உதவியோடு
தன் கணக்கை சோதித்துவிட்டு
பணமில்லாததை அச்சிறுவனிடம்
கூறிய அந்த அரை நொடியில்
மலர்ந்தணையும் மத்தாப்பாய்
உதிர்ந்து போன அச்சிறுவனின்
புன்னகையோடு தவறி விழுந்துவிட்ட - என்
தீபாவளியை கனத்த இதயத்தோடு
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.

எழுதியவர் : பால கிருஷ்ணா (17-Nov-12, 11:00 pm)
பார்வை : 165

மேலே