எல்லாமே அழகுதான்

கோயில்
அழகுதான்.
அதில் ...எல்லோர் மனதிலும்
குடியிருக்கும் இறைவன்
வரம் கொடுக்கும் வரை ....

குடும்பம்
அழகுதான் .
அதனுள் வாழும் உயிர்களோடு
குடியிருக்கும் உறவினர்கள்
போராடும் வரை ...

துயில்
அழகுதான் .
அதனுள் சோம்பியிராமல்
நாம் விழித்திருந்து
கனவு காணும் வரை ...

கருணை
அழகுதான் .
பிறர் .மனங்களோடு
நாம் நம்பிக்கையோடு
நினைக்கும் வரை ...

ஆசை
அழகுதான் .
அதுவே நம்மை அழிவுப் பாதைக்குச் செல்ல
தூண்டாதிருக்கும் வரை ..

துன்பம்
அழகுதான் .
அதுவே பிறர் தீய எண்ணங்களில்
நம்மைத் தீண்டாதிருக்கும் வரை ..

இன்பம்
அழகுதான்.
பிறர் மனதால் நம்மை
நோகாதிருக்கும் (புண்படுத்தாது)வரை ....

அன்பு
அழகுதான் .
அதுவே பிறரிடம் நம்மால்
வெறுக்காது அடிமையாகும் வரை ...

சிற்பம்
அழகுதான் .
உளியினால் செதுக்கும்
சிற்பிக்கு கைகள் வலிந்து
ஓயும் வரை ...

கலை
அழகுதான்.
அதனை உருவாக்கிய
கலைஞனை மகிழ்விக்கும் பொருட்டு
பாராட்டும் வரை ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-Nov-12, 7:49 am)
Tanglish : ellaame alakuthan
பார்வை : 216

மேலே