மூங்கில் போல !
![](https://eluthu.com/images/loading.gif)
வழிந்து விழும்
கூந்தல் அருவியை
காதுவழி கால்வாய்க்கு
கைகாட்டிவிட்டு,
விரியும் விழிகளை
வரிகளில் குவிக்கும்
அதிகாலை வினாடிகளில்
அவள் மேலும் அழகாகிறாள்,
நில்லாது வளரும் மூங்கில் போல !
வழிந்து விழும்
கூந்தல் அருவியை
காதுவழி கால்வாய்க்கு
கைகாட்டிவிட்டு,
விரியும் விழிகளை
வரிகளில் குவிக்கும்
அதிகாலை வினாடிகளில்
அவள் மேலும் அழகாகிறாள்,
நில்லாது வளரும் மூங்கில் போல !