மச்சானுக்கு செய்தி

காடுக்கரை வேர்வ சிந்தி
உளைச்ச என் மச்சானுக்கு
பக்குவமா கம்மங்கு கூழு
கிண்டிவைச்சு பத்திரமா
வூடு சேர சன்னலோரம்
நின்னு எட்டி பார்துதிருந்தேன்
மணிக்கணக்கா காத்திருந்தேன்
தாமரைபூ சிரிப்ப போல
மச்சான வரவ பார்த்துபுட்டு
சூடான தண்ணீர கலந்து
உடல்சோர்வ போக்க
கொல்லையோரம் எடுத்துவெச்சு
சந்தன மணக்க மச்சான்
குளிச்சு வந்து என் முந்தானை
ஈரம்பட தலைய தோர்த்திவிட்டேன்
ராப்பகலா உழைச்சு பசியாறும்
மச்சானுக்கு சேதி வெச்சேன்
நீ குடிச்ச கஞ்சியிலே
என் வயிறும் நிரஞ்சுருச்சு
நீ போட்ட வெத்தலையில்
என் நாக்கு செவந்துருச்சு
சாம்பலும் மாங்காவும்
தின்ன ஆசை வந்தாச்சு
குளிச்சு நாளும் ஆயாச்சு
வெட்கப்பட்டு மாமன் தோளில்
சாஞ்சு செய்தி சொல்லி
மார்போரம் கோலம் போட்டேன்
பாசம் பொங்க அணைச்ச
மச்சான்கிட்ட வார்த்தை மறந்து
நானும் சொக்கி நின்னேன்....