கனவு பிரவேசம்,,,,

கனவு பிரவேசம்,,,,

நீயும்நானும் ஓடிபுடித்து விளையாடிய கானல் புல்வெளியில் உன் சுவடுகளின் ஒரு தேடல்,,என் விழிகளை அகலத்திறந்துக் கொண்டு,,,

படுத்துக்கொண்டே எண்ணுகிறேன் நீலவானில் வேடிக்கையாய்,,,,, மின்னிமறையும் நட்சத்திரக் கூட்டங்களை,,,,துருவநட்சத்திரமாய் நீயிருப்பதை கண்டும் காணாமல்,,,

எதையோ இழந்த படியே வெறித்து பார்கிறேன் வெளிய ஓயாமல் பெய்து கொண்டிருக்கும் மழையை,,,காதோடு ஒலிக்கும் தவளைகளின் ரீங்காரம் என்னை என் இறந்த காலத்திற்கு மெதுவாய் கொண்டு போகிறது,,,

இன்று போனால் இனி இப்படி ஒரு மழையை எப்பொழுது இரசிக்க போகிறோமோ என்பதை போல்,,,,மனதோடு மிதமான ஒரு ஏக்கம்

பூக்களோடு சண்டையிடுகிறேன் உன்னை
பறித்த பின்பும் என்னோடிருக்கும் தருணம் வரை வாசம் மாறாமலிருப்பாயா என்று,,,

என்ன செய்வது இயற்கைக்கு ஒப்பான விடயங்களை அல்லவா கேட்டிருக்க வேண்டும்,,,மீண்டும் வாசம் மாறி வாடியே போகிறது,,என் நெஞ்சோடு ஒட்டித்தேய்ந்த ஆசைகளை போலவே,,,

நீ என் இதயத்தில் எழுதியது முடிவுரையில்லாத முகவுரை,,,காட்சிகளே இல்லாமல் காதல் வலை வீசுகிறாய்,,இதில் காணாமல் சென்றுவிட்ட என் முதல் முகவரியை நான் தேடுகிறேன்,,,

உன் கற்பனை கூண்டில் அகப்பட்டிருக்கும்
என் இளமைக் கனவுகளுக்கு ஒரு முடிவுகள்
கிடையாதா சொல்லிவிடடி

உன்னை அறிந்திராமல் போயிருந்தால்
என்னில் இத்தனை அவஸ்தைகள் இல்லையடா என்று கூறினாய் விளக்கங்களே இல்லாமல் விரைந்துகொண்டிருந்த என்வாழ்க்கையின் விடிவெள்ளியாய் நீயிருப்பதை மறந்து,,,,

என் வாழ்க்கையோடு யாரையும் இணைத்துக் கொள்ள விரும்பாதவனாய் போகிறேன்,,,நான் போகின்ற பாதை கரடு முரடான என் பாதை என்பதால் ,,,நீ அழைத்தது தெரிந்தும் ஏனோ திரும்பி பார்க்காதவனாய்,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Nov-12, 10:41 pm)
பார்வை : 182

மேலே