முகிலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முகிலன்
இடம்:  சிட்டங்காடு
பிறந்த தேதி :  19-May-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jul-2015
பார்த்தவர்கள்:  284
புள்ளி:  40

என்னைப் பற்றி...

B.Sc - maths

விவசாயம்

என் படைப்புகள்
முகிலன் செய்திகள்
முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2021 12:57 pm

.
.
மேகங்களில்லாது
வெட்டவெளிச்சமாய்
பளிச்சென்றிருந்தது
உன் கண்கள்

வார்த்தைப்
பரிமாற்றமில்லாதொரு
பேரமைதி நமக்குள்
நாம்

பருவநிலையோடு
உன்னை
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்

மெல்ல உடைத்தேன்
மௌனத் தாள்ப்பாளை ,..

அந்த வானுக்கும்
நமக்கும்தான்
எத்தனை ஒற்றுமை
பார்த்தாயா ...

மேகங்களை
உடுத்தியிருக்கும்போது மட்டும் வியர்த்துக்
கொட்டிவிடுகிறது
வானமும்
என்றேன் .

உன்
இதழ்க்கோடியில்
சின்னதாய் ஒரு
மின்னல் கீற்று

சட்டென்று மாறுகிறது
நம் வானிலை

பெய்கிறது
இடியுடன் கூடிய
கனமழை ....⛈️

மேலும்

முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2021 7:29 pm

.
.
கனவைக் கவிதையாக்க
முடிவதில்லை

மரங்களின் மூடியைத்
திறக்காமலேயே
மையை ஊற்றுகிறது
வானம்

கால்களில்
சதங்கை ஜதிக்க
ஓடையில ஓடும்
வார்த்தைகள்

சகதியோடு சலித்தெடுத்து
சமுத்திரம் விரையும்
பரல் குமிழ்கள்
மழை முத்தங்கள்

மழைத் தூவன்
மையலின் நிறம்
சாரலென்று சன்னலைச்
சாத்துகிறோம்

தாபம் விஞ்சும் மரங்கள்
வேர் கிளைத்த நிர்வாணம்

வெட்டிய வெளிச்சம்
விரகப் பிரளயம்

மழையென்று
குடைபிடித்து மறைக்கின்றோம்

பொழிந்த கவிதை
நாதியற்று
நதியாகிக் கலக்கிறது கடலை

நதியும் கடலும்
காணும் கனவைக்
கவிதையாக்க முடிவதில்லை எவராலும் ...

#கடல்தினம்

மேலும்

முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2020 4:35 pm

.

என்னோடு உறங்கிய நிழல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கின் ஆதி வெளிச்சத்தை
துயிலெழுப்ப இருளின் நுனிக் கிளையொன்றில் விழித்திருந்த கடைவாயின் எச்சில் ஒழுகிய
முத்தமொன்றை அம்பென எய்கிறது ஆற்றாமை

இன்னும் விடியாத
வெறும் படுக்கையின்
கடைசி விளிம்பு வரை துலாவும்
கனவின் பெருவிரல்கள்

பிரபஞ்சக் கற்பனையில்
அலைந்த அதிகாலைக் கனவு
கட்டி இழுத்து வருகிறது
ஆடை களைந்த
உன் பெருவெளியை

கனவின் தேகமெங்கும்
நெடிதுயரும் பேரலை
மோதிச் சிதறுகிறது
பேரன்பின் பாறைகளில்

தெறித்து வீழும் திவளைகளில்
துடிக்கும் தினவின் குஞ்சுகள்

கனவின் பேரலை முகடுகளுக்கு
மேலே கழுகெனப்
பறந்துகொண்டிருந்தது
உந்தன் நினைவுகள

மேலும்

முகிலன் - anitha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2020 10:23 am

நன்றன்று பிரித்து எழதுக

மேலும்

நன்றன்று= நன்று+ அன்று எவ்வாறெனின், நன்று என்ற நிலைமொழி ஈற்றேழுத்து று என்பது, இதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் இங்கு 'உ' என்பது உயிர் எழுத்து. வருமொழி முதல் எழுத்து 'அ 'என்பது இதுவும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" (அதாவது, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள 'உ' என்ற குறில் எழுத்து தன்னுடன் இணைன்துள்ள மெய்யெழுத்தை விட்டு மறையும். அந்த அடிப்படையில் 'உ' என்ற எழுத்து மறைந்த நிலையில், நன்ற்+அன்று என்று இருக்கும். அடுத்து "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி நிலைமொழி ஈற்று 'ற்' என்ற எழுதுடன் வருமொழி 'அ' சேர்ந்து ற்+அ=ற என்று ஆகியமையால் நன்றன்று என்று புணர்ந்துள்ளது. 23-Jan-2021 9:11 pm
நன்று +அன்று 09-Mar-2020 10:48 am
வணக்கம் எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... பதிவேற்றம் செய்த எண்ணங்களை நீக்க முடியவில்லை.... 100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது.... கவிதை சமர்ப்பிப்பது எங்கே.... எழுது மேலே எங்க இருக்கிறது காணும் 09-Mar-2020 10:47 am
நன்று அன்று 07-Mar-2020 2:56 pm
முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2020 4:18 pm

.
நீ வரையத் துவங்கினாய்

உன்னைப் பிரிய
மனமின்றியே
குழம்பிக் கிடக்கிறது
கோலமும்

குவிந்த உன் விரலிடை
பட்டகமாக
ஒரு
நிறப்பிரிகையே நடக்கிறது

நீண்ட நேரமாய்
உனக்கும்
கோலத்துக்குமிடையே
நடக்கும்
வண்ணங்களின்
பரிமாற்றத்தை
வளைந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
வானவிில்

உன்னைப்பற்றி
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றின்
எழுத்துக்களெல்லாம்
தலைகீழாய்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
வவ்வால்களைப் போல்
குனிந்து
கோலம் போடும
உன் முகம் தரிசித்து
வார்த்தைகளாய்
சாப விமோசனம் பெற

நீ தேவதை என்று
நான்
எழுதத் துவங்கிய
கவிதை ஒன்றிற்காய்
படபடத்த
உன் இமை கண்டு
சிறகு முளைக்கிறது
கவிதைக்கும்

மேலும்

முகிலன் - முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 10:40 pm

சிருஷ்டியில்
நிஜங்களும்
மாயையும்
படைக்கப்பட்டன

நிஜங்கள் புலப்பட்டன

மாயை
புலன்களுக்கு
அகப்படாமலேயே
போய்விட்டது ...

எனவேதான் ,
பெண்
படைக்கப்பட்டாள் ...

மேலும்

Tamil visai illathathaal mozi thadumaatram 12-Oct-2015 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வித்யா

வித்யா

சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
வித்யா

வித்யா

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
வித்யா

வித்யா

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே