அஇலியாஸ் அகமத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஇலியாஸ் அகமத்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  09-Aug-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2018
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  4

என்னைப் பற்றி...

எனக்கு கவி எழுதும் திறனை இன்னும் அதிகம் தருக யா அல்லாஹ்....இயற்பியலை படித்தாலும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவன்.....
கணிதத்தை படித்தாலும் கவியின் மீது காதல் கொண்டவன்....😍

என் படைப்புகள்
அஇலியாஸ் அகமத் செய்திகள்
அஇலியாஸ் அகமத் - Nanthini S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2018 5:51 pm

சுட்டெரிக்கும் சூரியனோடு
சுதந்திரமாய் வியர்வைக் குளியல்!

பட்டாம் பூச்சியின் முதுகில் ஏறி
பூவனச் சுற்றுலா!

தென்றலோடு
தேநீர் விருந்து!

குளிர் நிலவுடன்
கூட்டஞ் சோறு!

கடல் அலைகள் கேட்க
கதாகாலட்சேபம்!

சலசலக்கும் நதியோடு
சங்கீதக் கச்சேரி!

மழைத் துளிகளோடு
மனங்கொட்டி மாநாடு!

இயற்கையை இப்படி
ஏங்கி, ஏங்கிக் காதலிக்கும்
என் கதையில்
எதிரியென்று யாருமில்லை!

ஆம், இது உலகம் அதிகம்
கண்டிராதக் காதல் கதை!

மேலும்

நன்றி! 08-May-2018 5:05 pm
அருமை 👏 07-May-2018 10:24 pm
:) 03-May-2018 12:53 pm
thank you 03-May-2018 12:53 pm
அஇலியாஸ் அகமத் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2018 7:13 pm

உங்கள் இதயத்தை மிகவும் தொட்ட கவிதை எது ?

தமிழோ ஆங்கிலமோ வேறு மொழியோ எதுவாயினும் அந்த அனுபவத்தினை
விரும்பினால் ஏன் எப்படி எப்பொழுது என்ற சுய குறிப்புகளுடன் தாருங்களேன் !
நாங்களும் படித்துப் பார்க்கிறோம் .

SOLITARY REAPER என்ற WORDSWORTH ன் கவிதை என்னால் மறக்கமுடியாத
கவிதை. பள்ளியிறுதி படிக்கும் போது பாடப் புத்தகத்தில் இருந்தது.
கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வித்திட்ட உணர்ச்சி மயமான
கவிதை . கவிஞன் SOLITARY REAPER பற்றிய புரியாத அவள் பாடல் பற்றிய
உணர்வுகளை சொல்லும் அழகே தனியானது மிகவும் உணர்ச்சி மயமானது .

படம் : ஆங்கிலக் கவிஞர் WILLIAM WORDSWORTH ( 1770--1850

மேலும்

அருமை அருமை .கவிஞர் இக்பாலின் அழகிய பாடல் . ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹம் புல் புலேன்கி உஸ்கி யே கூலிஸ்தான் ஹமாரா ஹமாரா ! இக்பால் பற்றிய ஒரு குறிப்பு : பள்ளி நாட்களில் இக்பால் ஒரு நாள் வகுப்பிற்கு தாமதமாக வந்தார் . இக்பால் ஏன் லேட் என்று ஆசிரியர் கேட்டார் இக்பால் லேட்டாகத்தான் வரும் என்றார் அந்த கவி மாணவர் . ஆசிரியர் மகிழ்ந்து அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார் . இக்பால் என்ற சொல்லின் பொருள் புகழ் ! புகழ் அவ்வளவு விரைவாகவா வந்துவிடும் ? அழகிய பதில் ,பாடல் ;மிக்க நன்றி கவிப்பிரிய குமரி . 02-Mar-2018 8:27 am
பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள் அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள் இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும் வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே எங்கள் பாரதம் தான் எங்கள் அரவணைப்பும் பாதுகாப்பும் எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா..! ---------------------------------------------------------------------------- கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிய "ஸாரே ஜஹான் சே அச்சா " பாடலின் தமிழ் ஆக்கம் இது..! இதயத்தை தொட்டதை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்..! விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா(63). கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு சென்றார். அங்கு இருந்து அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் விண்வெளியில் இருந்து பேசினார். அப்போது ராஜீவ் அவரிடம் நமது இந்தியா அங்கு இருந்து பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று கேட்டார்..! அப்போது அவர் சொன்ன கவிதை "ஸாரே ஜஹான் சே அச்சா "..! அன்று நானும் நிலவிலிருந்து கற்பனை செய்தேன்... எந்த அளவு அர்த்தமுள்ள கவிதை வரிகள்..! என் இதயத்தில் இதை வெல்ல இனியொரு கவிதை.... " No chance ..!" குமரி பையன் 02-Mar-2018 2:12 am
தங்கள் கருத்திற்கும் தகவலுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல....கவின் சாரலன் அவர்களே...... 01-Mar-2018 1:50 pm
பாரதியின் அற்புதமான கவிதை. முடங்கிக் கிடப்பவனையும் எழுச்சியுறச் செய்யும் கவிதை . இயற்கையை உன் ஆசானாகக் கொள் என்று போதித்தவன் மேலே படத்திலிருக்கும் கவிஞன்தான் . அவன் DAFFODILS படித்துப் பாருங்கள். வலையில் கிடைக்கும் . இளைய வயதில் இயற்கையை நேசிக்கும் இலியாஸ் அஹமத்திற்கு நன்றி பாராட்டுக்கள். 01-Mar-2018 10:51 am
அஇலியாஸ் அகமத் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 12:31 am

நீ என்ன?
நாணலோ?..
நான் உன்னை
அடித்துச் சென்றாலும்!
என்னையே !
சரணாகதியாய்
பற்றி விட்டாயே...

நான் நாணுகிறேன்
உன் செயலை மெச்சி..

மேலும்

மிக்க நன்றி 01-Mar-2018 1:52 pm
நாணல் // நாணம் நாணல் - ஆறு, ஏரிகளில் ஈர நிலத்தில் வளரும் தாவரம்... நாணல் (கோரை) பாய் (கோரைப் பாய்) தயாரிக்கவும், கூரை வேயவும் பயன்படுகிறது. ----- நாணம் - வெட்கம் 01-Mar-2018 10:22 am
நாணல் என்பதன் அர்த்தம் என்ன?? 01-Mar-2018 8:43 am
நன்றி தமிழே ... 20-Jun-2017 1:24 am
அஇலியாஸ் அகமத் - அஇலியாஸ் அகமத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2018 11:42 pm

முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்

மேலும்

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗 26-Feb-2018 11:43 pm
உள்ளத்தின் எண்ணம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm
அஇலியாஸ் அகமத் - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2017 3:54 pm

ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!

எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம்
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு
கண்டு விளையாட்டு!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு ப

மேலும்

உள்ளங்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கும் போதுதான் மனிதத்தின் மகிமை புரிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:35 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Reshma மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Feb-2018 10:16 am

காலத்தை நினைக்கிறேன்;
நிம்மதியை யாசிக்கிறேன்.
நெடுநேரம் தூங்குகிறேன்;
தயவு செய்து - என் அறைக்
கதவுகளைத் தட்டாதீர்கள்.
டையரியினுள் மனுக்கள்
சொட்டுச் சொட்டாய்
என்னுயிரை சிந்துகின்றது
நினைவுகளின் மீட்டல்கள்
கழுத்தை நெரிக்கின்றது
காற்றை போல் வந்தவள்
பூகம்பமாய் மாறினாள்
மழலை போல் சிரித்தவள்
என் ஆயுளை முடிவுக்கு
கொண்டு போய் விட்டாள்
போர்க்களமும் இல்லை;
பகைவர்களும் இல்லை;
ஆனால் - என்னை மட்டும்
துப்பாக்கிகள் சுடுகிறது
மார்புக்குள்ளும் வேதனை
கடிகாரத்தின் சுவாசத்தை
உள்வாங்கி நிறைகிறது
அவளுக்காய் எழுதப்பட்ட
என்னிதயத்தை - இன்று
அவளே தூக்கி வீசிவிட்டாள்
பட

மேலும்

அழுது கொண்ட எழுதிய வேதனை நண்பா! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:40 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2018 7:39 pm
அழகான சொல் நடையில் மனத்தை ஆளுகிறது வரிகள். போர்க்களமும் இல்லை; பகைவர்களும் இல்லை; ஆனால் - என்னை மட்டும் துப்பாக்கிகள் சுடுகிறது. மனம் மயங்கி ரசித்த வரிகள். வாழ்த்துகள் நண்பா.. 19-Mar-2018 8:59 am
அருமை தோழா 18-Mar-2018 9:52 pm
அஇலியாஸ் அகமத் - அஇலியாஸ் அகமத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 11:42 pm

முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்

மேலும்

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗 26-Feb-2018 11:43 pm
உள்ளத்தின் எண்ணம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm
அஇலியாஸ் அகமத் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 11:42 pm

முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்

மேலும்

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗 26-Feb-2018 11:43 pm
உள்ளத்தின் எண்ணம் போல் மாற்றங்கள் உன்னை நாடி வரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2018 9:35 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே