கடலும் கடலைச்சார்ந்த நிலத்தில் வாழ்பவன்.தமிழ் மீது ஆழ்ந்த பற்றுண்டு.காதலால்தான் உலகம் சுவாசிக்கிறது என என்னும் சாமானிய மனிதன்.நான் அனுபவித்து எழுதிய கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று இந்தியாவில் மதம் சார்ந்த கட்சிகளினால்தான் கலவரங்கள் உண்டாகின்றன.இதனால் இந்தியாவின் ஒற்றுமை கேள்விக்குறியாகி உள்ளது.அதனால் மதம் சார்ந்த(இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம்,இதர) கட்சிகளுக்கு தடை விதிக்கலாமா?
முதலில் சாதி சார்ந்த கட்சிகளுக்கு தடை விதியுங்கள்.............
சாத்தியம் ஆனால்......அணைத்து மாநிலங்களிலும் சாதியமாக்குங்கள்................
இறுதியில் வருவோம்............மதம் சார்ந்த கட்சிகளுக்கு.......... 11-May-2014 11:05 pm
மதம் சாராத கட்சிகளால் கலவரங்களே நடக்கவில்லையா? ( காங்கிரஸ் - சீக்கியர்கள் )
சாதீயக் கட்சிகளால் கலவரங்கள் நடக்கவில்லையா? ( பா.ம.க. - விடுதலைச் சிறுத்தைகள் )
மாநிலக் கட்சிகளால் கலவரங்கள் நடக்கவில்லையா? ( தமிழ் நாடு - கேரளா - கர்நாடகம் )
எல்லாவற்றையும் தடை செய்துவிட்டால், பின் கொள்ளையடிக்கும் கட்சி என்று ஒன்று இருக்கும். அது பரவாயில்லையா?
எலிக்காக வீட்டைக் கொளுத்த முடியாது!
மக்களிடம் பக்குவம் வந்துவிட்டால், தேசமே பெரிது என்ற நிலை வந்துவிட்டால், யாரும் யாரோடும் ஒத்துப் போவர்.
ஒரு நாட்டின் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு நிலை. இதை நாம் தவிர்க்க முடியாது. நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தாண்டித்தான் நாம் மேனிலைக்குப் போக வேண்டும்.
மக்களின் அறிவு நிலை, சிந்திக்கும் திறன், சமத் தன்மை, மனித நேயம் - இவையெல்லாம் வளரும் போது எல்லாம் சரியாகிவிடும்.
நாம் அந் நிலைக்குத்தான் உழைக்க வேண்டும். 08-May-2014 9:16 pm
உலகில் மனமகிழ்வுடன் வாழ்பவன் கல்வி அறிவை மட்டும் கொண்டவனா பணத்தை மட்டுமே கொண்ட செல்வந்தனா? அல்லது இவர்கள் இருவரும் இல்லாது வேறு ஒருவரா?அப்படியானால் அவர்யார்?