ஜெயபிரசாத் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெயபிரசாத் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 06-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 17 |
அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !
உன்னை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!
உன்னை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !
உன்னை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !
உன்னை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !
உன்னை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !
என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !
கோலி விழி கொண்டு - என்னை
கோலமிட்டு செல்கிறாய் !
பார்வையாலே
ஏதேனும் சில சமயங்களில்
என் மீது உராயும்
உன் உடம்பின் ஸ்பரிசம்
உன்னருகே நானிருக்கும்
ஒரு சில சந்தர்ப்பங்களில்
என் மேல் படருகின்ற
உன் சுவாசக்காற்று
உறங்கும் நேரம் எல்லாம்
கனவுகளில் வந்து
காதலை சொல்லும் உன் பார்வை
இவை மட்டும் தான் இன்னும் என்னை
இருக்க வைக்கின்றன உயிரோடு....
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!
உன்னுடன் பேசுவதை விட
உன்னுடன் அமர்ந்திருந்த இடத்துடன்
பேசுவதிலேயே
அதிகமாய் கழிகிறது
என் வாழ்க்கை பொழுது....
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!
என்ன அதிசயம்
உன் பெயரை உச்சரிக்கும்போதே
உதடுகள் இனிக்கிறது..!
யாருக்கும் தெரியாமல் அழுகின்ற
தந்தையின் பாசம் பல நேரங்களில்
மகன்களால் உணரப்படாமலேயே
போய் விடுகின்றன…
உயிர் பிரியும் வலியை