maria arun raj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  maria arun raj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-May-2016
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  4

என் படைப்புகள்
maria arun raj செய்திகள்
maria arun raj - துறைவன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 6:45 am

                    பணம் பத்தும் செய்யும்…!!   


 1. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும். 
 2. தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும். 
 3. உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும் 
 4. கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும் 
 5. திடீரென செல்லாதவையாகும். 
 6. புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும். 
 7. வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும். 
 8. சில்லறை மாற்ற அலையச் செய்யும். 
 9. மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும். 
 10. நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும். 
 ந.க.துறைவன். 

மேலும்

maria arun raj - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2016 8:19 pm

மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி: ரூபாய் நோட்டு உத்தி மீது மன்மோகன் சிங் சரமாரி தாக்கு

மத்திய அரசின்

மாநிலங்களவையில் நோட்டு நடவடிக்கை மீதான காங்கிரஸ் கட்சியின் விவாதத்தை துவக்கி வைத்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | படம் உதவி: ராஜ்யசபா டிவி. 

'ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் கூடிய நாள் முதலே, நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் முன்னிலையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தொடர்ந்து முடங்கியது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வந்தார். நோட்டு நடவடிக்கை மீதான விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். அவையில் மன்மோகன் சிங் பேசியது:

"ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது. நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ஆனால், அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக புதுப்புது அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இது நல்ல போக்கல்ல. இத்தகைய அறிவுப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

'நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை'

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டப்பூர்வ கொள்ளை. மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை மீது குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது இலக்கல்ல. ஆனால், காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

அன்றாடம் அல்லல்படும் சாமானியர்களின் துயரங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். இதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். ஏனெனில் நோட்டு நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கம் 50 நாட்களில் சீரடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பிரதமர் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், "உலகெங்கிலும் ஏதாவது ஒரு நாட்டில், மக்கள் வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்த சொந்த பணத்தை தங்கள் பயன்பாட்டுக்காக எடுக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்களா?"

நோட்டு நடவடிக்கையில் மத்திய அரசை கண்டிக்க இது ஒன்று மட்டுமே போதுமானது. சாமானிய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், ஏழை மக்களின் துயர் துடைக்க சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நோட்டு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள் முடங்கியுள்ளன, கூட்டுறவு சேவை முடங்கியுள்ளன.

மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் வருங்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன் என்றே கூறுவேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அரசோ விளைவுகளை குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கத்தால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல் மக்கள் மத்தியில் ரூபாய் மீதும் வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.

சாமானிய மக்களே அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்று என்னால் இப்போது கணிக்க முடியவில்லை.

'எதிர்கால நலனுக்கான திட்டமல்ல'

ரூ.500,1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கை எதிர்காலத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஆளுங்கட்சி கூறிவருகிறது. அவ்வாறாக இது நீண்டகால நலனுக்கான திட்டம் என்று கூறுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்" என்பதே அது" என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.


மேலும்

கருப்பு பணம் என்பது புற்று நோய் எனும் மரம் போன்றது , இதன் அடி வேரை அழித்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம், திரு மோடி அவர்கள் அதன் கிளைகளை வெட்டி மரம் அழிந்து விடும் என்கிறார் சில மக்களும் மோடியை பிடிக்கும் என்பதற்காக உண்மையை மறந்து ஓ போட்டு கொண்டிருக்கிறார்கள் , திரு மோடி வெளி நாடு வாழ் இந்தியர்களிடம் காட்டும் பரிவும் நட்பும் உள் நாட்டு இந்தியர்களிடம் முதலில் காட்ட வேண்டும் வெளி நாடு முதலீடு உள்ளே கொண்டு வரும் முன் உள் நாட்டு தொழில் முனைவோரின் வாழ்வை உயர்த்த வேண்டும் முதலில் உலகம் சுற்றுவதை விட்டு இந்தியாவின் எல்லா கிராமங்களையும் சுற்றி பார்க்கட்டும் அதன் பின் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வரட்டும் , தென் இந்தியாவையும் வடஇந்தியாவையும் ஒரு குழந்தயாய் பார்க்கட்டும் 25-Nov-2016 11:37 am
maria arun raj - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2016 8:19 pm

மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி: ரூபாய் நோட்டு உத்தி மீது மன்மோகன் சிங் சரமாரி தாக்கு

மத்திய அரசின்

மாநிலங்களவையில் நோட்டு நடவடிக்கை மீதான காங்கிரஸ் கட்சியின் விவாதத்தை துவக்கி வைத்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | படம் உதவி: ராஜ்யசபா டிவி. 

'ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் கூடிய நாள் முதலே, நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் முன்னிலையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தொடர்ந்து முடங்கியது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வந்தார். நோட்டு நடவடிக்கை மீதான விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். அவையில் மன்மோகன் சிங் பேசியது:

"ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது. நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ஆனால், அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக புதுப்புது அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இது நல்ல போக்கல்ல. இத்தகைய அறிவுப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

'நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை'

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டப்பூர்வ கொள்ளை. மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை மீது குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது இலக்கல்ல. ஆனால், காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

அன்றாடம் அல்லல்படும் சாமானியர்களின் துயரங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். இதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். ஏனெனில் நோட்டு நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கம் 50 நாட்களில் சீரடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பிரதமர் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், "உலகெங்கிலும் ஏதாவது ஒரு நாட்டில், மக்கள் வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்த சொந்த பணத்தை தங்கள் பயன்பாட்டுக்காக எடுக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்களா?"

நோட்டு நடவடிக்கையில் மத்திய அரசை கண்டிக்க இது ஒன்று மட்டுமே போதுமானது. சாமானிய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், ஏழை மக்களின் துயர் துடைக்க சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நோட்டு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள் முடங்கியுள்ளன, கூட்டுறவு சேவை முடங்கியுள்ளன.

மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் வருங்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன் என்றே கூறுவேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அரசோ விளைவுகளை குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கத்தால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல் மக்கள் மத்தியில் ரூபாய் மீதும் வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.

சாமானிய மக்களே அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்று என்னால் இப்போது கணிக்க முடியவில்லை.

'எதிர்கால நலனுக்கான திட்டமல்ல'

ரூ.500,1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கை எதிர்காலத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஆளுங்கட்சி கூறிவருகிறது. அவ்வாறாக இது நீண்டகால நலனுக்கான திட்டம் என்று கூறுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்" என்பதே அது" என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.


மேலும்

கருப்பு பணம் என்பது புற்று நோய் எனும் மரம் போன்றது , இதன் அடி வேரை அழித்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம், திரு மோடி அவர்கள் அதன் கிளைகளை வெட்டி மரம் அழிந்து விடும் என்கிறார் சில மக்களும் மோடியை பிடிக்கும் என்பதற்காக உண்மையை மறந்து ஓ போட்டு கொண்டிருக்கிறார்கள் , திரு மோடி வெளி நாடு வாழ் இந்தியர்களிடம் காட்டும் பரிவும் நட்பும் உள் நாட்டு இந்தியர்களிடம் முதலில் காட்ட வேண்டும் வெளி நாடு முதலீடு உள்ளே கொண்டு வரும் முன் உள் நாட்டு தொழில் முனைவோரின் வாழ்வை உயர்த்த வேண்டும் முதலில் உலகம் சுற்றுவதை விட்டு இந்தியாவின் எல்லா கிராமங்களையும் சுற்றி பார்க்கட்டும் அதன் பின் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வரட்டும் , தென் இந்தியாவையும் வடஇந்தியாவையும் ஒரு குழந்தயாய் பார்க்கட்டும் 25-Nov-2016 11:37 am
maria arun raj - ஜெகன் ரா தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2016 9:35 pm

வருமானத்துக்கு அதிகமா சொத்து இருந்தா வழக்கு போடுவாங்களாம் .. 

அப்போ வருமானத்துக்கு அதிகமா கடன் இருந்தா அடைச்சுடுவாங்களா.?!?!

#எனக்குஒருடவுட்டு

மேலும்

maria arun raj - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 7:50 pm

தனலட்சுமி !
நீதான் எந்தன் குணம் - அதனால்
நிறைந்ததோ எனக்கு பணம் - அன்பில்
குறைந்ததே எந்தன் சினம்

நீ என்னுள் வந்ததனால்
நீங்காத சந்தோசம் - எனக்கு
நீங்கியதே சனி தோஷம்

நானும் காத்திருந்தேன்
ஞானம் வருமென்று நாட்கள் தான் ஓடியது
தான(ர)மாய் நீ வந்தாய்
ஞானமோ பெருகியது நதி போல

காணும் கண்ணிற்கு கவிதையாய் நீ வந்தாய்
காணா மண்ணிற்கும் கருவூலமாய் நீ வந்தாய் - இதை
நானாக சொல்லவில்லை ஞாலம் சொல்லியது
தூணாக இருக்கின்றாய் நாட்டிற்கு - நல்ல
துணைவியாய் இருக்கின்றாய் வீட்டிற்கு !

வீணான சொல் இல்லை வீரத் திருமகளே - உன்
விரல்கள் பட்டாலே வியந்திடுமே உலகமெல்லாம்
பரலோகம்

மேலும்

maria arun raj - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2016 12:47 am

கவிதை
நல்ல நடை வேண்டும்
சொல்லில் திறம் வேண்டும்
எதுகை மோனைஎன இனிக்கின்ற வார்த்தை வேண்டும்
புதுமை கருத்துக்கள் பொங்கி வரவேண்டும்
இடைப் போலி இலக்கணங்கள் இம்மி பிசகாது
நடை பயின்று வரவேண்டும்
விடை தெரியா வினாவிற்கெல்லாம் பெரும்
விந்தையாய் வீற்றிருத்தல் வேண்டும்
சிந்தனையில் நீ வரும்போது எனதுடல் சிலிர்த்தெல வேண்டும்
செந்தமிழே உனை படிக்க பெருஞ்செல்வமெல்லாம் போதாது!

மேற்கண்ட தன்மையெல்லாம் மேதினியில் பெண்களுக்கும்
மெருகேற்றி வருவதனால் பெண்ணே நீ ஒரு
பெருங்கவிதை !!!!!!

மேலும்

உண்மைதான்..என்றும் அழியாத காவியம் பெண் அவளின்றி உலகம் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 9:13 am
maria arun raj - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2016 8:52 pm

எத்துனை ஆண்டுகள் ஆனாலும்
ஈரம் இன்னும் காயவில்லை
கவிதை !!



ஒரு இடத்தில் ஏரோட்டி
உலகம் முழுதும் அறுவடை
கவிதை !



அணிவதற்கு பொன் நகை இல்லை
நேரணியும் நிரலணியும் நின்றுவர என்ன அழகு !
கவிதை!

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:53 am
maria arun raj - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2016 1:00 am

அரசில் இலக்கியங்கள் முரசொலித்த காலம் போச்சே
பரிசில் தந்து வளர்ந்த பாவலர்கள் ஞாலம் போச்சே !
புற நானுறும் அக நானுறும் புற முதுகிட்டோட
புவி மீது இலக்கியங்கள் புளங்கள் ஆச்சே !
அறவழியில் வாழ்கை என்ற அணிகலன்கள்
ஆசையெனும் ஆயுதத்தில் அழிந்தே போச்சே!
கவிதைஎன்றால் காதலுக்கும் சாதலுக்கும் படைக்கும்
காவியமாய் மாறிபோச்சே!

பாவிமகனே! பாரினை படைத்தது கவிதை அது
பாரதி வடிவத்திலே பல பாவலர் படிவத்திலே!
சாவினில் கூட ஒரு சரித்திரம் படைத்திட்ட - பல
சான்றோர் வாழ்வினையே நமக்கு சான்றிதழ் ஆக்கியதே
கவிதை என்றாலே

மேலும்

நல்லெண்ணம்...உலகின் மடியில் காட்சிகள் அதிகம் ஆனால் அதை எழுத கைகள் குறைவு ஆனால் காதலை மட்டும் எழுத எல்லோருக்கும் முடியும் அது உணர்வு அவை கானலில் ஒளிந்த ரகசியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 6:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே