பாண்டியன் A - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாண்டியன் A |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 18-Aug-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 15 |
நான் சிறுகதை, கவிதை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உடையவன். நல்ல படைப்புக்களை மட்ட்ரவர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன்.
கணினியில் டி டி பி பணிபுரிகிறேன் .
உனக்காக
நான் துரத்திய
மயில்தான்
இன்று
உன்னைத் தேடி
தன் இறகை பரிசாக
உன் கையில் கொடுத்துள்ளது.
உன்மேல்
எனக்குள்ள காதலை
தெரிவித்த மயில்
என்மேல்
உனக்குள்ள காதலை
என் கையிலும்
தன் இறகைக்
கொடுக்குமென்று
என் கையை விரித்து
காத்திருக்கிறேன்
- நந்தலாலா பாண்டியன்
தாகமெடுத்து
தண்ணீரெடுக்க வந்தாள்
கரை வந்த அவளோ
தலைவன் வருகையை
எண்ணியயண்ணி
காத்திருந்தாள்
தண்ணீருக்கு காத்திருக்கும்
அந்த மண்பானையைப் போல!
- நந்தலாலா பாண்டியன்
இன்று
நீ
கூண்டில்
அடைபட்டுக் கிடந்த
பறவைகளை
விடுதலை செய்ததைப் போல்
விடுதலை செய்யும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம்
சிறைபட்டுக் கிடக்கும்
என் காதல் பறவையும்!
- நந்தலாலா பாண்டியன்
இன்று
நீ
கூண்டில்
அடைபட்டுக் கிடந்த
பறவைகளை
விடுதலை செய்ததைப் போல்
விடுதலை செய்யும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம்
சிறைபட்டுக் கிடக்கும்
என் காதல் பறவையும்!
- நந்தலாலா பாண்டியன்
விவசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
புல் மேயும் ஆடுகளோ
மரம் மேலேறி மேய
இதுபோல் ஒரு நாள்
மனிதனும் உணவைத்
தேடித் தேடி கடைசியில்
மண்ணைத் தின்பான்
- நந்தலாலா பாண்டியன்
மின்னலை உள்வாங்கி
தங்க இலைகளாய்
மின்னுகின்றன
மரங்களிலுள்ள
இலைகள்
பாதங்களை
குளிர்விக்கிறது
தரையில் ஓடும்
நீர்
நீலமாய் நிறம் மாறி
பொழுதை
ரம்மியமாக்குகிறது
வானம்
இன்னும் கூடுதல் அழகாய்
உன்னோடு
என்னைச் சேர்த்து
நடக்க வைத்தது
இந்த
ஒற்றைக் குடை!