எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நேரினில் கண்டேன்நேரினில் கண்டேன்என்னை யுண்ணும்பெண் இவளோ...பக்கத்தில் சென்றேன்பைத்தியம் ஆனேன்பருவம்... (நா விஜயபாரதி)
20-Feb-2022 2:00 am
நேரினில் கண்டேன்
நேரினில் கண்டேன்
என்னை யுண்ணும்
பெண் இவளோ...
பக்கத்தில் சென்றேன்
பைத்தியம் ஆனேன்
பருவம் உணர்ந்தேனே... (2).
நான் இன்று நதியாகிறேன் - நீ என்ற
கடலோடு உனை சேர்கிறேன்
ஒன்றோடு ஒன்று ஆகிறேன் - உன்னோடு
நான் சேர்ந்து உப்புப் பாகிறேன்
இல்லையென்றால் இல்லையென்றால்
மண்ணோடு மண்ணாக நான் ஆகிறேன்.
வேண்டாம் என்றால் வேண்டாம் என்றால்
விதியோடு விதியாக நான் போகிறேன்.
பெண்ணே உனை
பெண்ணே உனை
எப்போதுமே நான் தாங்குவேன்.
நேரினில் கண்டேன்
நேரினில் கண்டேன்...