ஜெ.கி.கெளதம் ராம் - கருத்துகள்

தீபாவளி

மண்ணில் பற்றிய தீ

விண்ணில் வர்ணஜாலம் காட்டிட

மனமென்ற பூந்தொட்டியில்

எண்ணமென்ற தீயை குவித்திட

தீப்பூக்கள் மாரிப் பொழிந்திட

ஊசிவெடியென்ற கடைநிலை

ஊழியர்களின் கரங்கள் இணைத்து

சரவெடியாய் வெடித்து சிதறிட

கண்ணடிக்கும் விண்மீனிற்கு

ஏவுகனை தூது அனுப்பிட

பொறாமைகள் பொசுங்கிட

வன்மங்கள் கருகிட

அதிகாரவர்கம் சாம்பலாகிட

அன்பு நிலைத்திட

மனிதம் வளர்த்திட

தீபங்களை ஏற்றிடுவோம்

தீபாவளியை வரவேற்றிடுவோம்

- ஜெ.கி.கௌதம் ராம்

vanjam theerka megangal poo maari poliyatum. Its very nice

சிறார்களின் மன கண்ணாடி இக்கவிதை வாழ்த்துக்கள்


ஜெ.கி.கெளதம் ராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே