சுக.பாலா- கருத்துகள்

20ஆம் தேதி இரவு 12மணியோடு போட்டி முடிந்தது ஐயா..............

உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே

//புதிதாய் எழுத தொடங்க
எழுத்துக்களுக்கும், மொழிக்கும்
யார் யாரிடமோ மண்டியிட வேண்டியுள்ளது//

நீங்கள் நேரடியாக பொருளை எடுக்காதீர்கள், எழுத்துக்கும், மொழிக்கும் என்பது ஒரு நாட்டின் விடுதலை அல்லது இனவிடுதலை அல்லது ஈழ சுதந்திரம் போன்றவைகளாக பொருள்கொள்ள வேண்டும்.
இது ஒரு குறியீட்டு கவிதை
நன்றி

உடையாத மெளனங்கள்
(பொங்கல் கவிதை போட்டி )
...........................................................

நாங்கள் தொலைந்ததாய் உணர்ந்தபோது
தேட துவங்கினோம்
சரித்திர பதிவுகளில்

எங்களுக்கான பக்கங்களை
தின்று கொழுத்து திறிந்துகொண்டிருந்தன
எங்களுக்கெதிரான பக்கங்கள்

புதிதாய் எழுத தொடங்க
எழுத்துக்களுக்கும், மொழிக்கும்
யார் யாரிடமோ மண்டியிட வேண்டியுள்ளது

எங்கள் மெளனத்தை
சங்கடங்களின் அடையாளமாய்
யாரும் உணர்வதில்லை

காரணம்
போதிமரங்கள் பிடுங்கப்பட்டு
போர்மரங்கள் நட்டபோது

தமிழனுக்கான குரல்கள்கூட
தனித்தனியாய்தானே ஒலித்தது
...........................................................
:: பாலா ::
...........................................................

மனதை தொடும் கவிதை


சுக.பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே