Samyuktha- கருத்துகள்

ஊர் முழுதும் அடங்கிவிடாமல் இருக்க இந்த ஊரடங்கு தேவை;
பல நேரங்களில் முடங்கி இருப்பதும் அடங்கி நடப்பதும் மட்டுமே நமக்கு கை கொடுக்கும்.
வீட்டில் ஒருவற்கு அம்மை என்றால் நாம் எத்தனை பக்குவமாய் இருப்போம். ஊருக்கே இந்த நிலை என்ற போது நமக்கும் பொறுப்பு வேண்டும். வீட்டில் இருப்போரும் சும்மா இருக்காமல் இறைநாமத்தை சொல்லி சொல்லி கடவுளின் கோபத்தை குறைப்போம். குறை வின்றி நிறைவாய் வாழ் வித்த இறைவனிடம் இந்த நேரத்தில் மனம் உருக நாம் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு இனி செய்யாதிருப்போம் என்று சபதம் செய்து நமது தலைமுறை காப்போம். இறை சிந்தனையோடு வாழ்ந்ததால் தான் நம் முன்னோர்கள் எத்தனை துயரையும் வெற்றி கொண்டார்கள். நாமும் அதனை செய்வோம்.


Samyuktha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே