எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்த்துக்கள்... கவியிங்குநீ எழுதிடவே கண்டெடுத்த உனைத்தான் புவியெங்குநீ சென்றாலும்...

வாழ்த்துக்கள்...

கவியிங்குநீ எழுதிடவே
கண்டெடுத்த உனைத்தான்
புவியெங்குநீ சென்றாலும்
புகழ்ந்திடுமே கைகொடுத்து

உன்னெழுத்தில் காதலால்
உறவுகளை ஈர்க்கின்றாய்
உன்வயதில் எனைக்காண
உவகைகள் தருகின்றாய்

என்பிள்ளை பெயர்வைத்து
இருக்கின்றாய் நீயும்தான்
இனும்சிறப்பாய் வாழ்ந்திடவே
இறைவனிடம் வேண்டுகிறேன்

அன்புடன்... ப்ரியன்.

பதிவு : ப்ரியன்
நாள் : 2-Jun-15, 9:30 am

மேலே