எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சம்பவம் நேற்று வடகரை புதுக்குளத்தில் இரண்டு காளை மாடுகளை...

சம்பவம்

நேற்று வடகரை புதுக்குளத்தில் இரண்டு காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஒருவர் கொண்டு சென்றிருக்கிறார்..
அதில் ஒரு மாடு குளிப்பாட்டும்போது காலால் எத்தும் பழக்கம் இருப்பதால் முன்னங்கால் ஒன்றையும் பின்னங்கால் ஒன்றையும் கட்டிவிட்டு குளிப்பாட்டி இருக்கிறார், அது முடிந்ததும் இரண்டாவது மாடை குளிப்பாட்டும்போது அதுவும் முரண்டு பிடித்து தண்ணீரில் நீந்தி கரையை கடந்து அடுத்த இடத்தில் உள்ள காட்டு பூசரைக்குள் சென்றிருக்கிறது....
இவருக்கோ நீச்சல் தெரியாது என்பதால் அந்த மாடை பிடிப்பதற்காக சுற்றி சென்றிருக்கிறார், அதற்குள் மாறு கால்களை கட்டி வைத்திருந்த மாடு அதே ஆழமான தண்ணீர் நிறைந்திருக்கும் கிடங்கை இரு கால்களால் தட்டுத்தடுமாறி கடக்க முயன்று தண்ணீரில் மூழ்கிவிட்டது.....
அந்த மனிதருக்கு நீச்சல் தெரியாததால் மற்றவர்களை சத்தம் கொடுத்து கூட்டி வந்து மாடை இழுத்து கரைக்கு கொண்டு வருவதற்குள் பாவம் அந்த காளை மாட்டின் உயிர் பிரிந்து விட்டது...... தண்ணீரில் மூழ்கி இறந்ததா.... அல்லது பாம்பு கடித்து இறந்ததா என்று தெரியவில்லை, ஏனென்றால் அதன் கண்கள் நீலம் பூத்திருந்தது.... அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்....
1 வாரத்திற்கு முன்புதான் அந்த மாட்டை 60000 ரூபாய்க்கு வாங்கி வந்ததாக அதன் உரிமையாளர் மனம் வாடினார், எதுவாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தானே என்று பார்க்கும் எல்லோருக்கும் வேதனையாகவே இருந்தது........

நாள் : 19-Jul-15, 11:34 am

மேலே