பாவம் செய்பவர்களுக்கு உயிர் நீத்தபின் கட்டணமின்றி திறக்கபடுமாம் ஐதீகம்...
பாவம் செய்பவர்களுக்கு
உயிர் நீத்தபின்
கட்டணமின்றி
திறக்கபடுமாம்
ஐதீகம் படைத்த
நரகவாசல்.
#####
ஏழைகளும்
நடுத்தர மக்களும்
பேருந்து நிலைய நரக
கழிப்பிடங்களில் நுழைய
நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போல் இருமடங்கு பணம்
கட்டினால் தான்
பூலோக நரகவாசல்
துர்நாற்றம் வீசி அழைக்கும்.
####
ஒப்பந்ததாரர்களின் வசூல் வேட்டைக்கு உடந்தையாய்
இருப்போரை கண்டறிந்து தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?
@#@####
பேருந்து நிலையம் இருக்கும் தொகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிகள் என்ன செய்கிறார்கள்?
எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு வாக்குப் பிச்சை கேட்க மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.