எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த மாதம் ஜூன் 30 தேதியோடு இந்த “எழுத்து...

கடந்த மாதம் ஜூன்  30 தேதியோடு இந்த “எழுத்து “ இணையத்தளத்தில் இணைந்து மூன்று ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளேன். மூன்று வருடங்களில் நிறைய எழுதி பழகி இருக்கிறேன்.  நிறைவான படைப்புகளை படைத்திருக்கிறேன். . நிறைய தோழர்களையும்.. நிறைய ஆசான்களையும்.. இலக்கிய  புலமை வாய்ந்தவர்களையும் பெற்று இருக்கிறேன். கூடவே    நிறைய மனகசப்புகளையும் அடைந்து இருக்கிறேன்.  நிறைய பக்குவங்களை பெற்று இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த தோழர்களில் பலரும் இப்போது தளத்தில் எழுதுவதில்லை. நானும் கூட அதிக அளவில் படைப்புகளை பதிவு செய்ய இயலவில்லை. முன்பு இருந்த ஆரவாரம்.. பரபரப்பான இயக்கம், விமர்சன போர்கள், போட்டிகள் என எதுவும்  இப்போது இல்லை என்றாலும்.. எழுத்து தளத்தில் இன்னும் நான் மனநிறைவாக எழுதவே விரும்புகிறேன்.  உண்மையில் எழுத்து  அழகிய தமிழ் சொர்க்கம் தான் எனக்கு இப்போதும் எப்போதும். 


நன்றி ..! அனைவருக்கும்.. நன்றி..! 


-அன்பு நட்புடன்,
இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 4-Jul-16, 8:32 pm

மேலே