எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த தளத்தில் கட்டுரைத் தொடராக வெளி வந்த எனது...

 இந்த தளத்தில் கட்டுரைத் தொடராக வெளி வந்த எனது படைப்புக்கு விருது. இதனை எழுத்து தளத்திற்கு காணிக்கை ஆகுகிறேன்.படைப்பின் இலக்கிய விருது - 2016 : முடிவுகள் அறிவிப்பு
------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நமது படைப்பு குழுமம் இப்போது அடுத்தகட்ட நகர்த்தலுக்கு உயர்ந்து ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க திட்டமிட்டு இருந்தது. அதன்படி அறிவிப்பு செய்து நூல் வெளியிட்ட படைப்பாளிகளை தங்களது நூல்களை அனுப்ப சொல்லி இருந்தோம். விதிமுறைகளுக்குட்பட்டு இருந்த நூல்களை நம் குழுவின் தனி ஆய்வுக்குழு வந்த அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து அதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அளித்து இருக்கிறார்கள்.

படைப்பின் இலக்கிய விருது - 2016 ன் முடிவுகள் இதோ.

சிறந்த படைப்புகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை: உமை பற்குணரஞ்சன்--> கனவோடு புதைந்தவர்கள்
சிறுகதை : பொள்ளாச்சி அபி-->எங்கேயும் எப்போதும்
வாழ்வியல்/புதினம் : கட்டாரி-->முதுகெலும்பி
கட்டுரை: தா.ஜோசப் ஜூலியஸ்-->ஆட்டிப்படைக்கும் சிந்தனைகள்

மேலே தேர்வான நான்கு படைப்பாளிகளுக்கும் விருது+ 3000 ரூபாய் பணம்+சான்றிதழ் + பொன்னாடை அளித்து நமது ஆண்டுவிழாவில் சிறப்பிக்கப்படும்.

சிறந்த படைப்புகள்:(சிறப்பு பரிசு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை: கா.ந கல்யாணசுந்தரம்--> மனசெல்லாம்
சிறுகதை : தேவா சுப்பையா-->படைப்புகள் விற்பனைக்கு
நாவல்: ஆண்டோ கால்பட் --> ஒற்று
கட்டுரை: த பார்த்திபன் --> மார்க்சின் மூலதனம்

மேலே தேர்வான நான்கு படைப்பாளிகளுக்கும் விருது+சான்றிதழ் + பொன்னாடை அளித்து நமது ஆண்டுவிழாவில் சிறப்பிக்கப்படும்.

இப்பெருமைமிகு விருது தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் படைப்பு குழுமத்தின் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் வாழ்த்துகளைக் கூறி பாராட்டி மகிழ்கிறோம்.

இவ்விருது இனி ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படும். இன்னும் கூட உங்களின் ஆதரவு கரங்களின் வலிமைக்கேற்ப அடுத்தாண்டு இதற்கான பரிசுத்தொகையை மிக அதிகமாக்கப்படும். அது படைப்பாளிகளுக்கு பயன்பெறும் வகையில் கொடுக்கப்படும்.

இப்படி நாம் மேற்கொள்ள காரணம் வளரும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வெறும் எழுத்துகளாக மட்டுமே வைத்துக்கொண்டு இருக்காமல் அதை ஆவணப்படுத்தும் வகையில் நூல் வெளியிட ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்டதே...

படைப்பு - சமூகத்தின் இணைப்பு என்பது எல்லா வகையிலும் எடுத்தாளப்படும் என்பதை இன்னும் பல நிகழ்வுகள் இது போல உங்களுக்காக காத்திருக்கிறது.

விழாவுக்கு தயாராகுங்கள்...

வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

பதிவு : T. Joseph Julius
நாள் : 22-Aug-17, 11:37 am

மேலே