எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறும்பா குறும்பா என்பது ஒரே எதுகையையுடைய மூன்று அடிகளைக்...

குறும்பா

குறும்பா என்பது ஒரே எதுகையையுடைய மூன்று அடிகளைக் கொண்டதாகவும் முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும் மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒத்த இயைபு கொண்டதாயும் அமைக்கப்படும் தமிழ்க் கவிதை ஆகும். ஆங்கிலத்தில் இதையொத்த கவிதை வடிவம் limericks எனப்படுகிறது. ஆனால் limericks ஐந்து வரிகளைக் கொண்டிருக்கும்.

மஹாகவியின் ஒரு குறும்பா:

 "கற்பகத்தின் வெண்கழுத்திற் தாலி
கட்டுதற்கு முன்னின்றான் வாலி
அற்புதமாய் வாழ்ந்தார்கள்
ஆறு பிள்ளை பெற்றார்கள்
இப்பொழுதோ வேறு சோலி"

பதிவு : ராஜ்குமார்
நாள் : 30-Aug-17, 1:57 pm

மேலே