எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருத்தாடல்கள் ஏனோ தெரியல இல்ல இது எனக்கு மட்டும்...

                                                           கருத்தாடல்கள்

        ஏனோ தெரியல இல்ல இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சனையானும் 
புரியல, எப்பவாது ஓர் கவிதை எழுதுவேன், அதை நம் தளத்தில் பதிவிடுவேன், பதிவிட்டு சில மணித்துளிகள் கழித்து மீண்டும் தளத்தினுள் நுழைந்து பார்ப்பேன் இது பதிவிட்ட சில நாட்களுக்கு தொடரும்,, தகவல் ஏதேனும் இருந்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, , பசியில் உள்ள குழந்தைக்கு தாய்பால் கிடைத்த மகிழ்ச்சி இருக்கும், ஆனால் அது எல்ல நேரங்களிலும் நடந்ததில்லை, பல நேரம் பசியால் வாடிய அனாதை குழந்தையாகவே தளத்தை மூடிவிடுவேன். எனக்கும் தெரியும் அனைத்து கவிதைக்கும் படித்து கருத்திட நேரம் இல்லை ஏனென்றால் என்னாலும் அனைத்துக்கும் கருத்திட முடியவில்லை..

     பல நேரங்களில் பதிவைதிறந்து பார்வையாளரின் எண்ணிக்கையை பார்பேன், அது கணிசமாக இருக்கும் போது புட்டிபாலில் பசியாறிய குழந்தையாக உணர்வேன், பல நேரம் படித்தவர்களுக்கு என் கருத்து பிடிக்கவில்லையோ எனவும் எண்ணியதுண்டு, எனக்கும் தெரியும் நான் கலைஞன் அல்ல கவிஞன் என்று.. கவிஞன் பாராட்டைவிட கருத்து எத்தனைப் நபருக்கு பதிந்தது என்பதே அவன் சிந்தை ஆனால் நானோ கவிஞன் என்பதற்கு முன்பு மனிதனாச்சே ஆதலால்தான் இப்படி உணர்கிறேன் என்று தோன்றுகிறது.

    உண்மையில் நம்மில் பலர் கவிதையின் தலைப்பை கவிதையின் அளவிற்கு ஆழமாக சிந்திப்பது இல்லை எனத் தோன்றுகிறது, நான் எழுதிய சில மொக்க கவிதைக்கு நல்ல தலைப்பை வைப்பேன் அதன் பார்வையின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். நல்லதோ கெட்டதோ கருத்திட நானும் முயற்சிக்கிறேன், சில கருத்துகள் பல முறை என் தூக்கம் தொலைத்து பேனாவின் முனையை கடிக்க வைத்துள்ளது, நானும் சிலரின் தூக்க தொலைக்க முயற்ச்சிக்கிறேன்..

                                     சிறு பிள்ளையாய்
                                        உங்கள் 
                                        தௌபீஃக்










நாள் : 13-Apr-18, 10:27 pm

மேலே