எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கமூடி இல்லாத வாழ்க்கைதான் என்னுடையது .. ஆனா, என்னுடைய...

  கமூடி இல்லாத வாழ்க்கைதான் என்னுடையது .. ஆனா, என்னுடைய யதார்த்தத்திலிருந்து சற்று நான் திரும்பி பார்க்கிறப்போ .. எல்லோரும் என்னிலிருந்து வித்தியாசப்பட்டு தெரியிறாங்க .. நான் மட்டும் தனித்திருப்பதைப்போல உணருகிறேன் .. மாற்றிக்கொள்ள முடியாதது ன்னு இங்க ஏதுமில்லை .. அதையும் நானாகவே கற்றுக்கொள்ள விழைகிறேன் .. எனக்குத் தெரியும், இந்த இடத்தில், அடுத்தவர்களை நான் அனுமதிப்பேனானால், அவர்களால் எந்நிலையில் நின்று யோசிக்கமுடியாது என்பதை,, சில நேரம் எதையும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் போதல் தொலைதல் சுகம் என்கிறேன், அடுத்த கணம் அது ஒரு ஒளிவாட்டம்போல தோன்றி என்னை வழிமாற்றுகிறதோ என்றும் யூகிக்கிறேன், கடினங்களையும் சந்தித்திருக்கிறேன் உதாசீனங்களையும் கடந்திருக்கிறேன், ஆனால் இதற்கெல்லாம் இன்றுவரை கவலைப்பட்டதாக தெரியவில்லை, இதத்தனை நேர்தலி னிடையிலேயும் செல்லும் வழியெல்லாம் பிடித்தமான பூக்களை விதைக்க மறப்பதில்லை,, ஒருமுறைக்கூட சிரிக்காமல் கடந்ததில்லை, ஆனால் ஏனோ நான் மற்றவர்களிலிருந்து தனித்திருப்பதாகவே உணருகிறேன் ,,  

நாள் : 10-Sep-18, 2:02 pm

மேலே