எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையின் நீதி மன்னர்கள் வந்தும் போயும் நூற்றாண்டுகள் கழிந்தும்….ஒரு...

இயற்கையின் நீதி  

மன்னர்கள் வந்தும் போயும் 
நூற்றாண்டுகள் கழிந்தும்….ஒரு 
மாற்றமும் இல்லை டி.ஏன்.ஏக்களில்!! 
கட்டளைக்கு கட்டுண்டு இட்ட 
வேலையை செய்யத் தெரியும்... 
எதையும் ஏனென்று கேட்டதில்லை 
கூட்டி கழித்து பார்த்ததில்லை... 
ஒட்டிகிடந்த வயிறும் பத்தடி வீடும் 
படிக்க வழி செய்ததில்லை 
இருள் படிந்த மூளையில் வெளிச்சத்தின் 
கீற்று விழவில்லை!!!   

தேவையெனில் தன்னை மாற்றிக் கொள்ளுமாம்   
உலகம்... இயற்கையின் விதி!! 
நீரில் வசித்தவை நிலத்தில் ஊர்ந்ததும் 
குட்டைகள் நெட்டையாவதும் 
கருப்பு நிறம் வெளுப்பதும் 
உலகம் தன்னை மாற்றி கொண்டது...   

தலை சொறிதல் நீக்கின்... 
நெற்றிச்சுருக்கங்கள் டி.என்.ஏக்களை 
திருத்தி அமைக்கும்.... 
கனவுகளும் கேள்விகளும் 
தொடர்ந்திருந்தால் 
சில ஆண்டுகள் கழித்து.... 
இடுப்பில் கட்டிய துணி தலைப்பாகையாகும்!!   

கனவு காணுங்கள்!! கேள்வி கேளுங்கள்!! 
தேவையெனில் மாற்றி கொள்ளும் 
உலகம்... இது இயற்கையின் நீதி!!      

நாள் : 15-Sep-18, 11:06 pm

மேலே