படித்ததில் பிடித்தது ------------------------------ எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது....
படித்ததில் பிடித்தது
------------------------------
எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில் இருக்கின்றனர். அவர்கள் வாழும் ஊர் அவர்களது தொழில் ஏன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக்கூட என்னால் ஓரளவு அனுமானித்துவிட முடியும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னைப் பற்றி நீங்கள் கேட்டால் கூட நான் எங்கு படித்தேன் பத்திலும் பனிரெண்டிலும் எத்தனை மதிப்பெண்கள் வாங்கினேன் என்னை யாரெல்லாம் பாராட்டினார்கள் யாரெல்லாம் திட்டினார்கள் என்பதைக்கூட சொல்லிவிடுவேன். ஆனால் நான் சொல்வதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் தான் என்னை அலைகழிக்கிறது. கடந்து போன என்னால் இயற்றப்பட்ட அல்லது என் மீது இயற்றப்பட்ட செயல்கள் சரியானவை தானா என்று நான் அஞ்சிக் குழம்புகிறேன்.