சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி 2019 ஆம் ஆண்டுக்கான கேந்திர...
சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி
2019 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது நாவலாசிரியர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. முப்பதாண்டுகளாக எழுதிவரும் சோ.தர்மன் தெற்குத் தமிழ்நாட்டின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலில் எழுதும் படைப்பாளி. அங்கத நோக்குடன் மானுடரின் இயல்புகளை பார்ப்பவை அவருடைய நாவல்கள். ’துர்வை’ ‘கூகை‘ ‘சூல்’ போன்றவை அவருடைய முக்கிய்மான படைப்புக்கள்
சோ.தர்மனுக்கு வாழ்த்துக்கள்