எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடல் நீலநிற மேனியினளே! நீலவானின் நிறத்தை வாங்கியவளே! அலைகள்...

கடல்

நீலநிற மேனியினளே!

நீலவானின் நிறத்தை வாங்கியவளே!

அலைகள் தான் உன் மொழியோ? ஆர்ப்பரிக்கும் அலைகளால்

நிலமகளை முத்தமிட்டு

அமைதியாகிறாயே?

நிலமகளின் வியர்வை ஆறு

உன்னோடு கலந்ததால்

உவர்க்கிறாயோ?

ஆயிரம் உயிர்களின்

அடைக்கலமும் நீ

அமைதியில் அழகு நீ

ஆக்ரோஷத்தில்

ஆழிப்பேரலை நீ

பதிவு : ஜோதிமோகன்
நாள் : 27-Apr-21, 9:22 pm

மேலே