அந்த ஒருநாள் கடவுள்...!!!!

அன்றொரு நாள் கடவுள்,
தனை மறந்து கண் தூங்கிய நேரம்,
கனவில் சொர்க்கம் விட்டு
பூமியெனும் நரகம் வந்தார்..!!

பனிப்புல் தரையில் பாதம் பதித்து,
மகரந்த பூக்களை முகர்ந்தவர்க்கு,
மனித பூக்களின் வாசம் வித்தியாசமே..!!

தன்னை தான் காண கோவில் புகுந்தார்..!!
பசியுள்ள உயிர்கள் வாசலில் வாடுவதும்,
கோவில் உண்டியல் நிரம்பி வழிவதும்,
என்னவொரு விந்தையென சித்தம் குழம்பினார்..!!

சொர்க்கத்தின் தடம் தெரியாமல்,
சாக்கடை வீதியில் நடந்ததில்,
அவருடன் சொர்க்கம் செல்ல தயாரானது,
கொசுக்களும்,கொலைகார கிருமிகளும்,,!!!

நாவில் தண்ணீர் படாமல் ஒருநாள்
பூமி சுற்றிய அவருக்கு,
நம் வாழ்நாள் பஞ்சத்தை புரியமுடியவில்லை..??

திரியில்லா விளக்கினை அதிசயமாய் அவர் தொட,
மின்சாரமோ அவருக்கு தான் யாரென்று காட்ட,
அப்போது தெளிந்தார்,
அறிவியல் கடவுள் யாரென்று..!!

அறிவியல் வளர்ச்சியில் மனிதர்கள்,
அதே நகை,உடைகளுடன் கடவுள்கள்,
மாற்றம் தராத மனிதர்களை நினைத்து,
மனதிற்குள்ளே சிரித்து சென்றார்..!!
அந்த ஒருநாள் கடவுள்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (27-Feb-13, 5:48 pm)
பார்வை : 125

மேலே