அவளை தேடி தொலையும் நான்...!!!

உன்னை தேடி தேடி எங்கோ அலைந்தேன்,
தேடி பார்த்து தோற்று போனால்
என் உலகம் அழிப்பேன்...!!
நீ வானம் பறக்க
நான் மேகம் திறப்பேன்,
என் பாதம் வலிக்க
உன்னை தூக்கி சுமப்பேன்..!!
சிரித்தாலும் அழுதாலும் ரசிப்பேன்,
வெறுத்தாலும் அடித்தாலும் பொறுப்பேன்..!!

கேள்விகளை கேட்டு தொலைப்பாயே,
பதிலை கேட்டால் சிரித்து விடுவாயே,
நகம் கடிக்கும் அறிவாளி போல நீ
முட்டாளாகி நிற்பது நானல்லவா..??

குழந்தை தேடும் பொம்மை நீ தானே,
தேடி தொலைந்த குழந்தை நான் தானே,
எப்போதும் உன் பின்னால்
வருவதும் நான் தானே...!!

பூக்களுக்கு பிடித்தவள் நீ தானே,
நிலவுக்கு எதிரியும் நீ தானே,
உன் போல யாருமில்லை
நம் உறவினில் பிரிவுமில்லை..!!

என்னை விட்டு எங்கும் போகாதே,
உயிரை தவிர எதையும் கேட்காதே,
உன் உயிரோடு உயிரானால்
நான் எங்கும் பறப்பேன்..!!

பூமி சுற்றுவது பூமிக்கு தெரியாது,
காலத்திற்கு எதிர்காலம் தெரியாது,
நான் தேடுவது உனக்கும் தெரியாதெனில்
என்ன நான் செய்வது...???

எழுதியவர் : மனோ ரெட் (24-May-13, 10:51 am)
பார்வை : 176

மேலே