சில நினைவுகள் போதுமடி வாழ்தலுக்கு
மழை வரும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன் ;
உன்னை நினைக்கும்போதெல்லாம்
மழையும் வருகிறது...
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
நான்
காலமெல்லாம் ..!
*தேவதையே...!
துவட்டிவிட
வரவேண்டாம்;
என்னை கழற்றி விடும்
நாடகமும் வேண்டாம் ...
இப்படியே
நனைந்துவிட்டு போகட்டுமே
என் காதல் ..!