காடுவழி போறபுள்ள

ஓடுகிற தண்ணியில ஓலஒன்னு நாஅனுப்ப
காடுவழி போறபுள்ள கையிலதான் கெடச்சிருச்சா?
பாடுகிறேன் இக்கரையில் பாட்டொனக்குக் கேக்கலையா?
தேடுகிறேன் என்னுசுரத் தென்றலேநீ போய்ச்சொல்லு !

சந்தைக்கு நான்போறேன் சம்மதமா கூடவர
அந்திசாயும் பொழுதினிலே அவசரமா திரும்பிடலாம் !
தொந்தரவா நெனைக்காதே தூக்கமில்ல வொன்நெனப்பில்
வெந்துமனம் சாகிறனே வேதனயத் தீர்ப்பாயோ?

கூடிவரும் மேகமெல்லாம் கூராப்பு போட்டிருச்சே
வாடிபுள்ள வெரசாக மழபெஞ்சா நனஞ்சிடுவ!
ஓடிவந்து மச்சான உரிமையோடக் கட்டிடடி
சோடிபோட்டுச் சுத்திடலாம் சொக்கவச்ச சுந்தரியே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Feb-17, 1:23 pm)
பார்வை : 66

மேலே