அவளின் நகலும்,நிழலும்.....!!!!

உன்னை பார்த்த பின்பு,
நான் பார்க்கும் எல்லாம்
உன் நகலாகவே தெரிவது தான்
உன் சூழ்ச்சியா???
இல்லை அதுதான்
என் வீழ்ச்சியா???

கேள்விகள் பல நீ கேட்க,
எதுவும் புரியாமல் நான் நிற்க,
தலையில் தட்டி நீ சொல்கிறாய்
சரியான கிறுக்கன் நான் என்று..!!!

குறுகிய இடைவெளியில்
என் மனம் செல்கையில்,
இதுதான் பாதை என கைகாட்டி
வந்த வழியே நீ சென்று விட்டாய்..!!
நான் தனியே எந்த வழி செல்வது..??

உன் அனுமதியின்றி உன் நிழலுடன்
பேசிகொண்டிருக்கையில்,
ஒரு உண்மை தெரிந்தது..!!
உன்னை விட உன் நிழலையே
காதலிக்கலாம் என்று..!!!

எழுதியவர் : மனோ ரெட் (25-Dec-12, 12:21 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 164

மேலே