சிரிக்கிறாயா?அழுகிறாயா?........


நீ சிரிக்கிறாய் என

முகபாவனத்தைக்கொண்டு

உன்னைச் சுற்றியுள்ள

உறவுகளும்

உன்னோடு சேர்ந்து சிரிக்கின்றன....

நீ சிரிப்பதே

உன் அழுகையை

மறைக்கத்தான் சிரிக்கிறாய் என

சுகமான வலியால் துடிக்கும்

என் இதயத்திற்கு

மட்டும்தான் அல்லவா

சிரிக்கிறாயா?அழுகிறாயா?

என்பதே புரியும்.....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (5-Nov-10, 7:56 pm)
பார்வை : 503

மேலே