சிரிக்கிறாயா?அழுகிறாயா?........
நீ சிரிக்கிறாய் என
முகபாவனத்தைக்கொண்டு
உன்னைச் சுற்றியுள்ள
உறவுகளும்
உன்னோடு சேர்ந்து சிரிக்கின்றன....
நீ சிரிப்பதே
உன் அழுகையை
மறைக்கத்தான் சிரிக்கிறாய் என
சுகமான வலியால் துடிக்கும்
என் இதயத்திற்கு
மட்டும்தான் அல்லவா
சிரிக்கிறாயா?அழுகிறாயா?
என்பதே புரியும்.....