அவள் நினைவுகள்

மேகத்தை பிரிந்து
என் தேகம் சிந்திய
அந்த மழைத்துளி ,
இரவின் இனிமை ரசித்தபடியே
என் செவிகள் சுமக்கும்
அந்த அழகிய இசை ,
மணம் சிந்தும் மலரோடு சேர்த்து
என்னையும் உரசி சென்ற
அந்த தென்றல் ,
துன்பம் மறந்து
எனது பார்வை தொலைத்து
கனவுகள் தேடும் அந்த நித்திரை ,
இவையனைத்தையும் நேசிக்கிறேன்
காதலென்னும் சிறு கல் இடறி
என்னுள் விழுந்த தேவதை உன்னை
இவை நினைவூட்டும் போதெல்லாம் !!!!!!!
நினைவுகளுடன் ,
சுரேஷ்