தாய்ப் பாசம்

கருவறையில் சுமந்திட்ட தன் உயிரை
கதிரவன் ஒளிபட்டு கருகாமல் காத்திட
மகனின் சுமைகளை தானே சுமந்திட
முந்தானை தலைப்பால் முகத்தை மூடிட
அன்பானப் பார்வையால் ஆழ்ந்து நோக்கிடும்
பாசமுள்ள தாயின் காட்சிதனை கண்டால்
விந்தைமிகு விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அகிலத்தில் அன்னையரின் அன்புக்கு
ஆழ்கடல் உள்ளத்தின் அன்பு ஊற்றுக்கு
ஈடு இணைதான் இவ்வுலகில் உண்டோ ?
வாழ்ந்திடும் நாள்வரை காத்திடுவோம் தாயை
வணங்கிடுவோம் நாளும் வாழும் காலம் வரை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Feb-13, 9:42 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 151

மேலே