கல்லறை

இறைவன் கொடுத்ததில்
இது அற்புத வாழ்க்கையடா .......
வாழும் இந்த குறைந்த காலத்திலே
வஞ்சனை நமக்கு எதுக்கட.....
சாதித்து வாழ வேண்டிய நாம்
சாதியை நம்பி வாழ்கிறோமே.....
மனிதத்தை வளர்க்க வேண்டிய நாம்
மதத்தை போற்றி வளர்க்கிறோமே.....
ஏட்டுக் கல்வி கற்ற நாம்
ஏழை எழியோர்க்கு கருணை காட்ட மறந்தோமே.....
காசு பணம் எவ்வளவு சேர்த்தாலும்
நாம் போகும் இடம் கல்லறையே....
முடிந்த வரை வாழ்வோம்
பிறரை அன்பு செய்து.......

எழுதியவர் : hbbalan (20-Feb-13, 4:16 pm)
Tanglish : kallarai
பார்வை : 158

மேலே