!!!===((( மாற்றுத் திறனாளிகளுக்காக )))===!!!

உனக்குள் உள்ள திறமைகளை
உலகம் அறிய வேண்டுமடா!
ஊனம் என்ற வார்த்தையினை
உடைத்தெறியும் நேரமடா.

குறைகளை காணும் மனிதரினம்
கூனிக் குறுக வேண்டுமடா!
குருதி கலந்த வியர்வைகளில்
கடின உழைப்பு தோன்றுமடா.

கட்டுத்தறிக் காளையை போல்
கட்டுப்படாமல் ஓடிடடா!
கண்ணுக்குள்ளே முளைத்த கனவு
கண்ணெதிரே வந்து சேருமடா.

உழைப்பு என்ற மந்திரம்
உனக்கு தெரிந்தால் போதுமடா!
உருளும் உலகமும் எப்போதும்
உழைப்பிடம் மட்டும் தோற்க்குமடா.

வீணாய் போகும் நேரங்களெல்லாம்
வெற்றிக்கு தடையாய் இருக்குமடா!
வியர்வை சிந்த உழைத்தால் மட்டும்
வெற்றிகள் உன்னை சேருமடா.

எழுதியவர் : ராஜ்கமல் (21-Feb-13, 5:02 pm)
பார்வை : 152

மேலே