தெய்வீக மருந்து

காலையில் செய்தித் தாளினை
விரித்துப் படிக்கத் துவங்கினேன்
மூளையில் சென்று பதியாமல்
முதுகில் சுரீரென வலித்தது
ஓலமிடும் மனப் புலம்பலை
ஒருவருக்கும் சொல்ல இயலாமல்
சாலையில் வேலைக்குச் சென்றிட
சரசரவென்று நான் நடந்தேன்.

முகத்தினில் சிரிப்பு இன்றியே
மூட்டம் வாட்டி இருப்பதை
வழியில் பலரும் கேட்டனர்
சுழியம் என்றே கூறினேன்.
நன்றாய்தான் நான் இருக்கிறேன்
நலமாய் தானே நடக்கிறேன்
என்றே சொல்லி நடக்கையில்
எதிரே வந்தது ஒரு குழந்தை.

அம்மா தோளில் அமர்ந்த அது
அக்கா என்று எனை அழைத்தது
அக்கம் பக்கம் திரும்பினேன்
”பக்க பக்க” எனச் சிரித்தது
தன்னை தங்கையாய் நினைத்து
என்னைத்தான் அது அழைத்தது
சிரித்த தெய்வமென் முகத்திலே
சிரிப்பை மீண்டும் நிறுத்தியது

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (21-Feb-13, 5:21 pm)
பார்வை : 152

மேலே