பருவ மலை
கனவாகி போனதடா
கற்பனை உலகமடா
கண்ணீரும் சொந்தமில்ல
மனம் வென்னீரில் வேகுதடா
எத்தனியோ நாளாச்சி
நெனபெல்லாம் பொய்யாச்சே
மனசெல்லாம் கோட்டைகட்டி
அது-மண்ணாகி போனதடா
சேத்துல காலவச்சி
செந்நெல்லும் நான் வெதைக்க
விளையாம போனதடா
மனம் புண்ணாக வேகுதடா
பருவமலை நம்பி
நான் விதச்சை விதையல்லாம்
கரையான் தின்னுச்சே- என்
குடும்பம் கண்ணிரோட நின்னுச்சே