நீ எங்கே ?
பகலவன் பல் தேய்த்து
பரிமளித்த வேளைதனில்
பசும் புல் நுனிமேல்
படர்ந் திருந்த பனித் துளியே !
நீ எங்கே ?
கண்டும் காணாதுச் சென்றாயோ !
கதிரவன் கண்பட்டு மறைந்தாயோ !
எங் குன்னைத் தேடினாலும்
அங்குன்னைக் காணவில்லை !
எளியவனின் இளம்மனது
என்னாகும் தெரியிலியோ !
நானா !
இளம்பெண் முகத்திலே !
இளம்பிறை நெற்றியிலே.
வியற்வை முத்துக்களாய்
விளைந்திருக்கேன் தெரியலையா ?