நீ எங்கே ?

பகலவன் பல் தேய்த்து
பரிமளித்த வேளைதனில்
பசும் புல் நுனிமேல்
படர்ந் திருந்த பனித் துளியே !

நீ எங்கே ?

கண்டும் காணாதுச் சென்றாயோ !
கதிரவன் கண்பட்டு மறைந்தாயோ !
எங் குன்னைத் தேடினாலும்
அங்குன்னைக் காணவில்லை !
எளியவனின் இளம்மனது
என்னாகும் தெரியிலியோ !

நானா !

இளம்பெண் முகத்திலே !
இளம்பிறை நெற்றியிலே.
வியற்வை முத்துக்களாய்
விளைந்திருக்கேன் தெரியலையா ?

எழுதியவர் : raja (6-Mar-13, 11:48 am)
சேர்த்தது : raja ps
பார்வை : 122

மேலே